Published : 09 Mar 2017 05:42 PM
Last Updated : 09 Mar 2017 05:42 PM
பண மதிப்பு நீக்க அறிவிப்பு அன்று நடத்த சம்பவங்களை முன்வைத்து படமொன்றை இயக்கி வருகிறார் பாரதிராஜா.
'குற்றப்பரம்பரை' கதையை படமாக்கப் போகிறேன் என்று படப்பூஜை போட்டார் இயக்குநர் பாரதிராஜா. ஆனால் அப்படம் தொடங்கப்படவில்லை. மேலும், 'ஓம்' என்ற கதையை முழுக்க வெளிநாட்டில் படமாக்கவுள்ளதாகவும் அறிவித்தார். அப்படமும் தொடங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் தற்போது விதார்த் நடிப்பில் புதிய படமொன்றை துவக்கியுள்ளார் பாரதிராஜா. புதுக்கோட்டையில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சகாதேவன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பு நீக்கம் அறிவிப்பு அன்று, நடந்த சம்பவங்களை முன்வைத்து இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார் பாரதிராஜா. இதன் கதையை எழுதியுள்ளார் ரத்னகுமார்.
புதுக்கோட்டை படப்பிடிப்புக்குப் பிறகு முழுக்க சென்னையிலேயே மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT