Last Updated : 28 Feb, 2017 03:18 PM

 

Published : 28 Feb 2017 03:18 PM
Last Updated : 28 Feb 2017 03:18 PM

பவர் பாண்டி படப்பிடிப்பு நிறைவு: இறுதிகட்ட பணிகள் துவக்கம்

தனுஷ் இயக்கத்தில் உருவாகிவந்த 'பவர் பாண்டி' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுற்று இறுதிகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகிவரும் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் தனுஷ் கவனம் செலுத்த தொடங்கியதால் 'பவர் பாண்டி' இறுதிகட்ட படப்பிடிப்பு எப்போது என்ற கேள்வி எழுந்துவந்தது. சென்னையில் 'பவர் பாண்டி' படத்தின் இறுதி 5 நாட்கள் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

நேற்று (பிப்ரவரி 27) 'பவர் பாண்டி' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுற்றது. ஏற்கனவே டப்பிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளிலும் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது. மார்ச் 9ம் தேதி இசை வெளியீடும், ஏப்ரல் 14ம் தேதி பட வெளியீடு என்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் இயக்குநராக அறிமுகமாகவுள்ள படம் 'பவர் பாண்டி'. ராஜ்கிரண் நாயகனாக நடித்து வரும் இப்படத்தில் தனுஷ், மடோனா செபஸ்டியன், பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இயக்குநர் கவுதம் மேனன், 'விஜய் டிவி' திவ்யதர்ஷினி, வித்யூலேகா ஆகியோர் கவுரவ தோற்றத்திலும் நடித்துள்ளனர்.

வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் கதைக்களம் அதிரடி சண்டைக் காட்சி கலைஞர் (ஸ்டண்ட்மேன்) ஒருவரைப் பற்றிய கதையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x