Published : 21 Oct 2014 10:11 AM
Last Updated : 21 Oct 2014 10:11 AM
அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 1,095 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்யும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், ஆங்கிலம், தாவரவியல், விலங்கியல் மீன்வளர்ப்பியல் ஆகிய பாடங்களுக்கான நேர்முகத்தேர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், நேர்முகத்தேர்வில் கலந்துகொண்ட அனைத்து விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் (www.trb.tn.nic.in) நேற்று இரவு வெளியிட்டது. இறுதி தேர்வுபட்டியல் தனியே வெளியிடப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT