Published : 21 May 2017 04:22 PM
Last Updated : 21 May 2017 04:22 PM
'2.0'வில் அக்ஷய்குமார் கதாபாத்திரம் எனக்குப் பிடித்தமானது என்று அப்படத்தின் நாயகி ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '2.0'. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
தற்போது நடைபெற்று வரும் கான் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார் ஏமி ஜாக்சன். அங்கு அளித்துள்ள பேட்டியில் '2.0' படம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"’2.0’ படத்துக்காக என் வாழ்க்கையில் இரண்டரை வருடத்துக்கும் அதிகமான நேரத்தை செலவிட்டுள்ளேன். இயக்குநர் ஷங்கருக்கு அதில் இரண்டு மடங்கு போயிருக்கும்.
ரஜினிகாந்த் போன்ற ஒருவருடன் நடிப்பது எனது நடிப்புலக வாழ்க்கையில் ஒரு மைல்கல். அவருடன் சேர்ந்து பணியாற்றியதில் ஒவ்வொரு நாளும் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். ரஜினி அமைதியானவர். அவர் முன் சிறிய குழந்தை போல நான். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் மீது அளவுகடந்த மரியாதை உள்ளது. ஏனென்றால் இந்திய சினிமாவில் அவர் சிறப்பாகப் பங்காற்றியவர்.
அக்ஷய் வேடிக்கையானவர். ஒழுக்கமாக இருப்பதைப் பற்றி அவரிடம் கற்றுக்கொண்டுள்ளேன். படத்தில் அவரது கதாபாத்திரம்தான் எனக்குப் பிடித்தமானது" என்று தெரிவித்துள்ளார் ஏமி ஜாக்சன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT