Last Updated : 28 Jan, 2017 04:41 PM

 

Published : 28 Jan 2017 04:41 PM
Last Updated : 28 Jan 2017 04:41 PM

லண்டனில் தொடங்கியது கொலையுதிர் காலம் படப்பிடிப்பு

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'கொலையுதிர் காலம்' படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது.

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் படம் 'கொலையுதிர் காலம்'. யுவன் தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது. ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் படமான 'ஹஷ்' படப் பின்னணியைக் கொண்டு உருவாக இருக்கிறது. காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு பெண் எழுத்தாளர் வீட்டில் தனியாக இருக்கும் போது, சைக்கோ கொலைகாரன் ஒருவனிடம் சிக்கிக் கொள்கிறார். அவரிடமிருந்து தப்பித்தாரா என்பது தான் 'ஹஷ்' திரைக்கதை.

"'ஹஷ்' படத்தின் பிரதான கதாபாத்திரத்தின் சாயல், 'கொலையுதிர் காலம்' படத்தின் பிரதான கதாபாத்திரத்திலும் இருக்கும். மற்றபடி 'ஹஷ்' படத்துக்கும் எங்களது படத்துக்கும் சம்பந்தமில்லை" என்று 'கொலையுதிர் காலம்' படக்குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x