Published : 12 Sep 2018 02:34 PM
Last Updated : 12 Sep 2018 02:34 PM

சமந்தா - நாக சைதன்யாவின் முதலாமாண்டு திருமணப் பரிசு

இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பதுதான் எங்களின் முதலாமாண்டு திருமணப் பரிசு எனத் தெரிவித்துள்ளார் சமந்தா.

சமந்தா - நாக சைதன்யா இருவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி திருமணம் நடைபெற்றது. கோவாவில் நடைபெற்ற திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

திருமணத்துக்குப் பிறகும் பல படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. அவர் நடித்துள்ள ‘சீம ராஜா’ மற்றும் ‘யு டர்ன்’ என இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் நாளை (செப்டம்பர் 13) ரிலீஸாக இருக்கின்றன. இதனால், புரமோஷனில் பிஸியாக இருக்கிறார் சமந்தா.

அவரின் முதலாமாண்டு திருமண நாளுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. இந்நிலையில், மீடியாக்களிடம் பேசிய சமந்தா, “எங்களின் திருமண நாளன்று நானும் சைதன்யாவும் சேர்ந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. அதைத்தான் எங்களுடைய மிகச்சிறந்த திருமண நாள் பரிசாகக் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் சமந்தா. திருமணத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது.

‘நடிகையர் திலகம்’, ‘இரும்புத்திரை’, ‘ரங்கஸ்தலம்’ என இதுவரை 3 படங்கள் சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸாகியிருக்கின்றன. நாளை இரண்டு படங்கள் ரிலீஸாக இருக்கும் நிலையில், விஜய் சேதுபதி ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் சமந்தா கைவசம் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x