Published : 24 Sep 2014 11:13 AM
Last Updated : 24 Sep 2014 11:13 AM
புதுச்சேரி சட்டப்பேரவை இன்று திடீரென்று ஒத்திவைக்கப்பட்டது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் அண்ணி இறந்ததன் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.
புதுச்சேரி மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 8-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இன்றுடன் கூட்டத்தொடர் நிறைவுபெற இருந்த நிலையில், முதல்வர் ரங்கசாமியின் அண்ணி காலமானதையடுத்து, சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் இன்று ஒத்திவைக்கப்படுவதாகவும், இன்றைய அலுவல்கள், வரும் 26-ம் தேதி நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT