Published : 04 May 2019 12:48 PM
Last Updated : 04 May 2019 12:48 PM

சந்தானம் - யோகி பாபு இணைந்துள்ள ‘டகால்டி’

சந்தானம் - யோகி பாபு இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘டகால்டி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு 2’. ராம்பாலா இயக்கிய இந்தப் படம், கடந்த பிப்ரவரி 7-ம் தேதி ரிலீஸானது. ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் சார்பில் சந்தானம் தயாரித்த இந்தப் படத்தை, ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்கும் ‘ஏ1’ படம், ஆர்.கண்ணன் இயக்கும் படம் என தற்போது இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் சந்தானம். ஆர்.கண்ணன் இயக்கும் படம், ஆக்‌ஷன் மற்றும் காமெடி கலந்த படமாக உருவாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க இருக்கிறது.

இதற்கிடையில், ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டார் சந்தானம். இதில், யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மும்பையில் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்துக்கு ‘டகால்டி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காமெடியை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘சர்வம் சுந்தரம்’ படம் நீண்ட நாட்களாக ரிலீஸாகாமல்  தவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x