Published : 08 Mar 2018 01:22 PM
Last Updated : 08 Mar 2018 01:22 PM

எனக்குப் பிடித்த 5 பெண்கள்- வரலட்சுமி சரத்குமார்

இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளில் நலனுக்காக ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பை நடத்திவரும் நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம், ‘உங்களுக்குப் பிடித்த 5 பெண்கள் யார்?’ எனக் கேட்டேன். ஷூட்டிங் பிரேக்கில் அவர் பட்டியலிட்ட பெண்கள் இதோ…

சாயாதேவி : என்னுடைய அம்மா. மிகவும் வலிமையான பெண்மணி. எனக்கு தைரியத்தைத் தந்தவர். நான் இன்றைக்கு இந்த அளவுக்கு தன்னம்பிக்கையுடம் இருக்க முழுக்காரணமும் அவர்தான்.

அன்னை தெரசா : மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். நாம் எந்த அளவுதான் மற்றவர்களுக்கு உதவி செய்தாலும், அவர் அளவுக்கு செய்ய முடியுமா என்பது சந்தேகமே!

இளவரசி டயானா : மக்களிடம் அதிகாரத்தோரணை காட்டிய ராஜ குடும்பத்தில், அவர்களிடம் அன்பாகப் பேசி இதயத்தில் இடம்பிடித்த முதல் ராஜ குடும்பத்துப் பெண். எல்லோரையும் சமமாகப் பாவித்தவர்.

ஜெயலலிதா : பெண்ணாக இருந்து தமிழ்நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தவர். எதைக் கண்டும் அஞ்சாது, துணிவுடன் நின்று போராடியவர்.

இந்திராகாந்தி : இந்தியாவின் முதல் பிரதம மந்திரி. இந்த நாட்டையே ஒரு பெண் ஆள்வது என்பது மிகச்சிறந்த விஷயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x