Last Updated : 13 May, 2019 11:58 AM

 

Published : 13 May 2019 11:58 AM
Last Updated : 13 May 2019 11:58 AM

மும்பை அணியின் ஸ்கோரையும், வெற்றியையும் கச்சிதமாக கணித்த நட்ராஜ்

மும்பை அணியின் ஸ்கோரையும், வெற்றியையும் கச்சிதமாக தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார் ஒளிப்பதிவாளர் நட்ராஜ்

ராகுல் சாஹரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, மலிங்காவின் கதிகலங்க வைக்கும் கடைசிப்பந்து யார்கர் ஆகியவற்றால் ஹைதராபாத்தில் நடந்த 12-வது ஐபிஎல் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை ஒரு ரன்னில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

இப்போட்டி தொடங்கிய உடனே,  சமூகவலைத்தளத்தில் பலரும் மும்பை அணி எவ்வளவு ரன்கள் அடிப்பார்கள் என்று போட்டி போட்டு பதிவிட்டனர். மேலும், 'Mr.லோக்கல்' படக்குழுவும் மும்பை அணியின் ஸ்கோரை சரியாக கணிக்கும் 3 பேருக்கு படக்குழுவினர் சார்பாக சிறப்பு பரிசு என்றும் அறிவித்தது.

இதனால் பலரும் மும்பை அணி ஸ்கோர் இது தான் என்று ட்வீட் செய்ததைப் பார்க்க முடிந்தது. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ் தனது ட்விட்டர் பதிவில் “149?...” என்று சரியாக குறிப்பிட்டார். மும்பை அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போதே நட்ராஜ் இதனை ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சரியாக கணித்திருப்பது தொடர்பாக பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பதிவில், நட்ராஜின் சரியாக ஸ்கோர் கணிப்பைக் குறிப்பிட்டு, “ஸ்வாமி நட்டியானந்தா.... ஸ்வாமிஜி அப்படியே ரிசல்ட்டும் சொல்லிட்டிங்கன்னா பல பேரும் ஹார்ட் டாக் வராமல் தவிர்க்கலாம்” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது, இறுதிகட்டத்தில் நட்ராஜ் தனது ட்விட்டர் பதிவில், “மும்பை அணி ஜெயிக்கும்” என்று தெரிவித்தார். இதற்கு பலரும் திட்டத் தொடங்கினார்கள். ஆனால், இறுதியில் மும்பை அணியே வென்று கோப்பையை கைப்பற்றியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x