Last Updated : 04 Apr, 2019 02:25 PM

 

Published : 04 Apr 2019 02:25 PM
Last Updated : 04 Apr 2019 02:25 PM

தமிழில் நடிப்பு; இந்தியில் இயக்கம்: பிரபுதேவாவின் திட்டம்

தமிழ்ப் படங்களில் மட்டும் நடிக்கலாம். இந்தியில் படங்கள் இயக்கலாம் என்று பிரபுதேவா திட்டமிட்டுள்ளார்.

நடிகர், நடன இயக்குநர், பாடலாசிரியர் மற்றும் இயக்குநர் என்று பல்வேறு துறைகளிலும் பணிபுரிந்து வருகிறார் பிரபுதேவா. தமிழில் விஷால் நடித்த 'வெடி' படமே இவரது இயக்கத்தில் வெளியான கடைசிப் படமாகும்.

2015-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியில் 'தபாங் 3' படத்தை இயக்கி வருகிறார். சல்மான் கான் நடிக்கும் இப்படத்தின் நாயகியாக சோனாக்‌ஷி சின்ஹா ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது முதல்கட்டமாக  மகாராஷ்டிரா மாநிலம் இந்தூரில் பாடல் காட்சியைப் படமாக்கி வருகிறார்.

தனது சென்டிமென்ட் கணக்குப்படி முதல்வேலை யாக கடந்த 3 நாட்களாக பாடல் காட்சியை எடுத்து வருகிறார் பிரபுதேவா. ‘தபாங் 3’ படத்துக்கு சல்மான் கான், பிரபுதேவா கூட்டணியில் உருவான ‘வான்டெட்’  படத்தின் இசையமைப்பாளர்  ஷாஜித் – வாஜித் இசையமைக்கின்றனர்.

இதற்கிடையே தமிழில் தற்போது தனது நடிப்பில் எந்த ஒரு புதிய படத்தையும் ஒப்புக்கொள்ளாத பிரபுதேவா அடுத்து மீண்டும் சல்மான் கான் நடிப்பில் ஒரு இந்திப் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வருகிறது.  மேலும் தற்போது ஹ்ருத்திக் ரோஷனிடம் ஒரு கதை சொல்லி அதற்கும் ஓ.கே. வாங்கியுள்ளார்.

இதன் மூலம் தமிழில் நடிப்பது, இந்தியில் படங்கள் இயக்குவது என்ற முடிவுக்கு பிரபுதேவா வந்திருப்பது தெளிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x