Published : 19 Apr 2019 12:34 PM
Last Updated : 19 Apr 2019 12:34 PM
’சர்கார்’ படத்தின் எதிரொலியாக 49 -பி பிரிவை பயன்படுத்திய தனது வாக்கை செலுத்திய வாக்காளர் ஒருவர் நடிகர் விஜய்க்கும், இயக்குனர் முருகதாஸுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
'சர்கார்' படத்தில் தன்னுடைய ஓட்டை இன்னொருவர் போட்டுவிட்டார் என்று வாதாடி ஜெயிப்பது போன்று கதை அமைத்திருப்பார். இதில் கூறப்பட்ட 49-ஓ என்ற சட்டத்தை தற்போது தேர்தல் ஆணையம் கையிலெடுத்து தங்களுடைய விளம்பரங்களில் குறிப்பிட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வியாழக்கிழமை முடிவுற்றது. இதில் பல வாக்களர்களின் பெயர் விடுப்பட்டதால் அவர்கள் வாக்களிக்க முடியாமல் போனது.
இதில், தனது வாக்கை மற்றொருவர் செலுத்திவிட்டார்கள் என்று கூறி, பிரிவு 49 பி பிரிவை பயன்படுத்தி சிலர் வாக்களித்துள்ளனர்.
அந்த வகையில் வாக்களித்த கணேஷ் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டு நடிகர் விஜய்க்கும், இயக்குனர் முருகதாஸுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து ”என் ஓட்டு கள்ளஓட்டு போட்டுட்டாங்க 2மணிநேர வாக்கு வாதத்திற்கு பிறகு 49-P பிரிவை பயன்படுத்தி Ballot ஓட்டு போட்டு வீடு வந்தேன் நன்றி சார் உங்களுக்கும் தளபதி விஜய் சார் க்கும்..” என்று பதிவிட்டிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT