Last Updated : 02 Apr, 2019 12:09 PM

 

Published : 02 Apr 2019 12:09 PM
Last Updated : 02 Apr 2019 12:09 PM

உங்கள் படங்கள் எங்கள் நெஞ்சில் வாழும்: மகேந்திரனுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் புகழாஞ்சலி

உங்கள் படங்கள் எங்கள் நெஞ்சில் வாழும் என்று இயக்குநர் மகேந்திரன் மறைவு குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

மகேந்திரன் மறைவு குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

முன்னோடி இயக்குநர்களில் ஒருவர் மறைந்துவிட்டார் என்பதைக் கேட்க மிகவும் வருத்தமாக உள்ளது. நீங்களும், உங்கள் படங்களும் எப்போதும் எங்கள் நெஞ்சில் வாழும் சார். ஆன்மா சாந்தியடையட்டும்.

இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x