Published : 02 Apr 2019 05:57 PM
Last Updated : 02 Apr 2019 05:57 PM
இயக்குநர் மகேந்திரன் படைப்புகள் என்றும் மறையாது என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.
'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
இயக்குநர் மகேந்திரன் மறைவு குறித்து நடிகை அஞ்சலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
மகத்தான இயக்குநர் மகேந்திரன் சாரின் மறைவு பற்றிக் கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தம் கொண்டுள்ளேன். அவர் உருவாக்கிய உன்னதப் படைப்புகள் என்றும் மறையாது.
இவ்வாறு அஞ்சலி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT