Last Updated : 02 Apr, 2019 10:39 AM

 

Published : 02 Apr 2019 10:39 AM
Last Updated : 02 Apr 2019 10:39 AM

தன் படைப்புகள் வழியே நம்மோடு கலந்திருக்கிறார்: மகேந்திரனுக்கு சசிகுமார் புகழாஞ்சலி

தன் கலைப் படைப்புகள் வழி நம்மோடு கலந்திருக்கிறார் என்று இயக்குநர் மகேந்திரன் மறைவு குறித்து சசிகுமார் தெரிவித்துள்ளார்

'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.

மகேந்திரன் மறைவு குறித்து நடிகர் மற்றும் இயக்குநர்  சசிகுமார் தெரிவித்திருப்பதாவது:

தமிழ் சினிமாவை உலக சினிமாவாக வளர்த்தெடுத்த ஆளுமை மகேந்திரன் ஐயா மறைந்தாலும் தன் கலைப் படைப்புகள் வழி நம்மோடு கலந்திருக்கிறார்.

இவ்வாறு சசிகுமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x