Published : 06 Apr 2019 06:02 PM
Last Updated : 06 Apr 2019 06:02 PM

முதலில் சூர்யா, அப்புறம் அஜித்: இயக்குநர் சிவா திட்டம்

முதலில் சூர்யா படத்தையும், பிறகு அஜித் படத்தையும் இயக்கத் திட்டமிட்டுள்ளார் சிவா.

அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகிவரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுவென நடந்து வருகின்றன. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முதலில் மே 1-ம் தேதி ரிலீஸ் என அறிவித்த படக்குழு, தற்போது ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலீஸ் என வெளியீட்டுத் தேதியை மாற்றியது.

இதற்கிடையே, அஜித்துக்கு நேரடிப் படம்  ஒன்றை இயக்கத் திட்டமிட்டு, அந்த வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் எச். வினோத். இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார்.

‘விஸ்வாசம்’ படத்தை வெற்றிப்படமாகக் கொடுத்த சிவா, அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் மும்முரமாக உள்ளார். இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் வேலைகள் முடிந்ததும், மறுபடியும் அஜித்தை வைத்து சிவா படம் இயக்குவதும் உறுதியாகியுள்ளது. எனவே, ஐந்தாவது முறையாக அஜித் - சிவா கூட்டணி இணைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x