Last Updated : 22 Apr, 2019 04:25 PM

 

Published : 22 Apr 2019 04:25 PM
Last Updated : 22 Apr 2019 04:25 PM

விஜய் சேதுபதியுடன் கூட்டணியா? - இயக்குநர் ஆனந்த் ஷங்கர் விளக்கம்

விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு இயக்குநர் ஆனந்த் ஷங்கர் விளக்கமளித்துள்ளார்.

'அரிமா நம்பி', 'இருமுகன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'நோட்டா' படத்தை இயக்கியவர் ஆனந்த் ஷங்கர். விஜய் தேவரகொண்டா நடித்த அப்படம் தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

அக்கதையில் விஜய் சேதுபதி நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், 'இருமுகன்' படத்தின் தயாரிப்பாளரான ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு ஆனந்த் ஷங்கர் தனது  ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான பதிவில், “எனது அடுத்த படம் குறித்த தகவலில் உண்மையில்லை. ஆனால், அக்கூட்டணி எனக்கு பிடித்துள்ளது. தற்போது நல்ல கதைகள் உருவாக்குவதில் பணிபுரிந்து வருகிறேன். எந்தவொரு படத்திலும் ஒப்பந்தமாகவில்லை” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் ஆனந்த் ஷங்கர்.

இந்த தகவலால் விஜய் சேதுபதியை இயக்கவுள்ளதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x