Last Updated : 05 Apr, 2019 11:06 AM

 

Published : 05 Apr 2019 11:06 AM
Last Updated : 05 Apr 2019 11:06 AM

ரஜினி பட போட்டோஷூட் படங்கள் லீக்: ஏ.ஆர்.முருகதாஸுக்கு தொடருக்கு சோதனை

ரஜினி படத்தின் போட்டோஷூட் படங்கள் இணையத்தில் வெளியானதால், படக்குழு பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது.

'பேட்ட' படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது.

இதன் படப்பிடிப்பு ஏப்ரல் 10-ம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளது. பெரும்பாலான காட்சிகளை மும்பையிலேயே படமாக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இப்படத்துக்கான போட்டோஷூட் மற்றும் படத்தில் ரஜினியின் லுக் ஆகியவை இறுதிசெய்யும் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், படத்துக்கான போட்டோஷூட்டின் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் லீக் ஆகின. இதனால் படக்குழுவினர் பெரும அதிர்ச்சி அடைந்தனர். இப்படங்கள் மூலம் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிப்பது உறுதியாகிவிட்டது.

ரஜினி காவல்துறை உடையின் மீது, ப்ரவுன் கலர் கோட் போட்டுக் கொண்டு கையில் கம்பியுடன் அமர்ந்திருப்பது போல புகைப்படம் எடுத்துள்ளனர். இதில் ரஜினி வயதானவராக நடிக்காமல், கருப்பு டை அடித்து கொஞ்சம் இளமையாகக் காட்டியுள்ளனர்.

இன்னும் படப்பிடிப்பு தொடங்கவே இல்லை. அதற்குள் இப்படியாகிவிட்டதே என்று ஏ.ஆர்.முருகதாஸ் அணியினர் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால், இதே போன்றதொரு சர்ச்சை 'சர்கார்' படத்துக்கான போட்டோஷூட்டிலும் நடைபெற்றது. இதனால் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இப்புகைப்படங்கள் பலராலும் ஷேர் செய்யப்பட்டு, இணையத்தில் வைரலானது. அதனைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் பலரும், அப்புகைப்படத்தை ஷேர் செய்ய வேண்டாம் என்று அனைவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x