Published : 08 Mar 2019 08:37 AM
Last Updated : 08 Mar 2019 08:37 AM

ரோஜா சீரியலில் நதியா

சன் தொலைக்காட்சியில் ப்ரியங்கா, சிபு சூரியன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடிப்பில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ சீரியல் வரும் மார்ச் - 18 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடரில் ரோஜாவாக நடிக்கும் ப்ரியங்கா, தான் வாழ்ந்த ஆதரவற்றவர்கள் வசிக்கும் இல்லத்தை மீட்க வகுக்கும் திட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு நகர்வதுதான் கதைக்களம். குடும்ப உறவுகள், சிறைச்சாலை களம் என திரில்லர், நெகிழ்ச்சி கலந்து ஒளிபரப்பாகி வரும் இத்தொடர் அடுத்த 2 வாரங்களில் இரவு 9 மணி ’பிரைம் டைம்’ சீரியல் பட்டியலுக்குள் நுழையவுள்ளது.

மேலும் இந்தத் தொடரை நோக்கி பார்வையாளர்களை இன்னும் ஈர்க்க நடிகை நதியாவை இந்த சீரியலுக்குள் கொண்டு வருகிறார்கள். முதன்முறையாக தமிழ் சின்னத்திரை சீரியலுக்குள் நதியா நுழைகிறார் என்பது கூடுதல பலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x