Published : 22 Feb 2019 03:04 PM
Last Updated : 22 Feb 2019 03:04 PM

ரஜினிக்காக நடிகைகள் இணைந்த ஷோ

சன் தொலைக்காட்சி சீரியல், ஜீ தமிழ் தொகுப்பாளினி என வட்டமடித்து வரும் சசிகலா, மலேசியாவின் எஸ்ட்ரோ வானவில் சேனலில்  விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘ரஜினியுடன் நான்’ என்ற நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பொறுப்பேற்கிறார்.

‘‘ரஜினி, விஜய் மாதிரி பிரபலங்களை வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் கொண்டாடும் விதமே அலாதியானது.  அந்த வரிசையில்  ரஜினிகாந்தை மையமாக வைத்து அசத்தப்போகும்  ஷோவாம் அது.  அதுவும் அவர் கூடவே 80-களில் நடித்து  அசத்திய  பூர்ணிமா, ராதா, மேனகா, அம்பிகா தொடங்கி இப்போது ‘பேட்ட’ படத்தில் நடித்த சிம்ரன் வரைக்கும் இந்நிகழ்ச்சிக்கு உள்ளே  இருப்பார்கள். இந்த நிகழ்ச்சியை உருவாக்கும் அனுபவமே நெகிழ்ச்சியாக இருந்தது. இப்போது ரஜினி சாரை மையமாக வைத்து ஷூட்  செய்தது போலவே  அடுத்து விஜய் சாரின்  நிகழ்ச்சியை உருவாக்கும்  திட்டமும் இருக்கிறது.  அதையும்   பொறுப்பாக வழங்க வேண்டும். ’என்னப்பா...  நீங்க சொல்கிற இந்த   நிகழ்ச்சியை  மலேசியா போனாதான் பார்க்க முடியுமா?’ என்று  கேட்கறீங்களா...  கவலையை விடுங்க. யூ-டியூப் வழியே  யார் வேண்டுமானாலும் எங்கிருந்தும்  பார்க்க முடியும்!’’ என்று  கண்களை சிமிட்டுகிறார், சசிகலா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x