Published : 15 Feb 2019 08:43 AM
Last Updated : 15 Feb 2019 08:43 AM
‘பிரிவோம் சந்திப்போம்’, ‘தாயுமானவன்’, ‘ஆண்டாள் அழகர்’ என சின்னத்திரையில் பிஸியாக இருந்த கல்யாணி இப்போது லண்டனில் இருக்கிறார்.
‘‘பெங்களூருவில் மருத்துவராக இருந்த என் கணவர் இப்போ பணி நிமித்தமா லண்டனுக்கு வந்துட்டாங்க. எங்க வீட்டுக்கும் புது வரவாக நவ்யா பாப்பா வந்தாச்சு. நவ்யா என்றால் புதிய தொடக்கம்னு சொல்வோம். அதையே பெயரா வைத்துவிட்டேன். அவங்க பிறந்து 5 மாசம்தான் ஆகுது. நான் பெங்களூரு, லண்டன்னு மாறி மாறி பயணிச்சிட்டே இருக்கேன். நவ்யாவுக்கு ஒரு வயசு ஆனதும் அடுத்த புதிய சீரியல்கள் பற்றி யோசிக்கலாம்னு இருக்கேன்’’ என்றார்.
‘‘லண்டன்வாசியாக மாறியது எப்படி இருக்கிறது?’ என்று கேட்டதற்கு, ‘‘இப்போ இங்கே பயங்கர குளிர். குழந்தையோட நேரம் செலவழிப்பதால் அப்படியே நாட்கள் போகுது. என்னதான் இருந்தாலும் நம்ம மண், நம்ம மனிதர்கள்னு ரத்தமும், சதையுமாக பயணிக்கிற நம்ம ஊர்மாதிரி வராது. இப்போதான் இங்கே தமிழ் சங்கத்துல எல்லாரும் பழக ஆரம்பிச்சிருக்காங்க. போகப் போக பழகிடும்னு நினைக்கிறேன்’’ என்கிறார் கல்யாணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT