Last Updated : 04 Sep, 2014 10:37 AM

 

Published : 04 Sep 2014 10:37 AM
Last Updated : 04 Sep 2014 10:37 AM

நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு நயன்தாராதான் காரணம்: உதயநிதி விளக்கம்

"நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு நயன்தாராதான் காரணம்" என்று நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்து வரும் 'நண்பேன்டா' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. ராஜேஷின் உதவி இயக்குநர் ஜெகதீஷ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, நயன்தாராவுடன் காதல், உதயநிதி தற்கொலை முயற்சி என செய்திகள் பரவியது. இதற்கு உதயநிதி தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், முதன்முறையாக இச்செய்திக்கு விளக்கம் அளித்து பேட்டி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, "நான் மருத்துவமனைக்குப் போக நயன்தாராவும் ஒரு விதத்தில் காரணம்தான். ஆனால், அது தற்கொலை முயற்சி இல்லை.

'நண்பேன்டா' படத்தில் ஒரு ஃபைட் சீன். அதில் நயன்தாராவை நான் சுத்திவிட, அவர் வில்லனை அறைந்துவிட்டு திரும்ப வருகிற மாதிரி ஒரு காட்சி. ஆனால், நான் சுத்திவிட்டதும் என்னையே அவர் அடித்துவிட்டார். அவரது நகம் என் இடது கண்ணில் குத்தி ரத்தம் வழிந்தது.

அதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கட்டுப் போட்டு ரெஸ்ட் எடுக்கிற அளவுக்கு காயம். அதுதான் நயன்தாராவுக்கும் என் மருத்துவமனை விசிட்டுக்குமான தொடர்பு" என்றார் உதயநிதி ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x