Published : 11 Feb 2019 11:40 AM
Last Updated : 11 Feb 2019 11:40 AM

என் வாழ்க்கையில் முக்கியமான மூன்று ஆண்கள்: செளந்தர்யா ரஜினிகாந்த் உருக்கம்

என் வாழ்க்கையில் 3 முக்கியமான ஆண்கள் என்று மூன்று பேரை செளந்தர்யா ரஜினிகாந்த் பட்டியலிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய அன்பு அப்பா, தேவதை போன்ற மகன், இப்போது என்னுடைய விசாகன் ஆகியோர் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மூன்று ஆண்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான செளந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம் இன்று (திங்கட்கிழமை) சென்னையில் நடைபெற்றது. தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும் 'வஞ்சகர் உலகம்' என்ற படத்தில் நடித்தவருமான விசாகன், செளந்தர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். அமெரிக்காவில் படித்த விசாகன், தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

திருமணத்துக்கு முன்பு கடந்த 3 நாட்களாக திருமண வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் இரு குடும்பங்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இன்று நடைபெற்ற திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x