Published : 15 Dec 2018 09:21 AM
Last Updated : 15 Dec 2018 09:21 AM

மணிரத்னத்தின் பிரம்மாண்ட திட்டம்

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை அடுத்து, பிரம்மாண்ட பொருட்செலவில் அடுத்த படத்தை எடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். இந்த யோசனையில் ஒன்றாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டு தள்ளிக்கொண்டேபோன ‘பொன்னியின் செல்வன்’ கதையும் ஒன்று என கூறப்படுகிறது. அதோடு இந்த கதையில் விக்ரம், சிம்பு, ஜெயம்ரவி மூவரையும் நடிக்க வைக்கலாம் என்கிற திட்டத்தில் அவர்களுக்கு கதையின் கருவை மணிரத்னம் அனுப்பியுள்ளதாகவும் அவரது வட்டாரங்கள் கூறுகின்றன. அவரது பிரம்மாண்ட படைப்பு பற்றிய அறிவிப்பை 2019 தொடக்கத்தில் வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார் மணிரத்னம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x