Published : 03 Nov 2018 03:53 PM
Last Updated : 03 Nov 2018 03:53 PM

’2.0’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா: விஷால் கேள்வியும் அக்‌ஷய்குமாரின் சுவாரசிய பதிலும்

வாரத்தில் ஒரு நாளாவது உங்கள் அம்மாவுக்காக அரிசி உணவான இட்லி, தோசை சாப்பிடுங்கள் விஷால் என அக்கறையுடன் வேண்டுகோள் விடுத்தார் அக்‌ஷய் குமார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலக பிரபலங்கள் வீடியோ வாயிலாக ‘2.0’ படக்குழுவினருக்கு கேள்வி எழுப்பினார்கள். அதற்கு படக்குழுவினரும் பதிலளித்தார்கள்.

இதில் அக்‌ஷய் குமாரின் ஃபிட்னஸ் குறித்து விஷால் கேள்வி எழுப்பினார்.  ”உங்களின் ஃபிட்னெஸ் பத்தி படிச்சு வியந்திருக்கேன். உங்க ஃபிட்னெஸை எப்படி மெயின்டெயின் பண்றீங்க?” எனக் கேட்டார். அதற்கு அக்‌ஷய் குமார் பதிலளித்ததாவது:

நான் ஜிம் வெச்சிருக்கேன். 4 மணிக்கு எழுந்துவிடுவேன். என் வாழ்வில் இதுவரை ஒருநாள் கூட நான் சூரிய உதயத்தைப் பார்க்காமல் இருந்ததில்லை. என் அப்பா ஆர்மியில் இருந்ததுனால் அது எனக்கு பழக்கமாகிடுச்சு.  என்னை யாருமே இதற்கெல்லாம் கட்டாயப் படுத்தியதில்லை. எனக்கு இது பிடிச்சிருக்கு. நான் என் உடலை கோவில் என்று நினைக்கிறேன். அதுதான் காரணம். 

விஷால் உங்க ஃபிட்னெஸ் பத்தியும் படிச்சிருக்கேன். நீங்க ரைஸ் டயட் இருப்பதாக சொன்னாங்க. ஆனால், இதனால் உங்கள் அம்மா வருத்தப்படறாங்க என்றும் தெரியும். உங்க அம்மாவோட சந்தோஷத்துக்காக வாரத்தில் ஒரு நாளாவது டயட் இல்லாமல் நல்லா சாப்பிடுங்க. இட்லி, தோசை சாப்பிடுங்க" என்றார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x