Published : 02 Oct 2018 10:51 AM
Last Updated : 02 Oct 2018 10:51 AM

பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா

'பாகுபலி' வில்லன் பிரபாகருடன் பிரபுதேவா மோதிய சண்டைக்காட்சி சென்னையில் படமானது.

பிரபுதேவா - லட்சுமி மேனன் நடிப்பில் அர்ஜுன் எம்.எஸ். இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'யங் மங் சங்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்தது.

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் 'யங் மங் சங்' படத்தில் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின், காளி வெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்தப் படத்திலும் வில்லன் கதாபாத்திரம் ஏற்கிறார்.

சமீபத்தில் இந்தப் படத்திற்காக பிரபுதேவா பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டைக் காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டுப் பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கேற்றனர்.

பிரபுதேவா இந்த படத்தில் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார். சண்டைகளை கற்றுக்கொடுக்கும் தொழிலைச் செய்யும் கூட்டத்தின் தலைவனாக பாகுபலி வில்லன் பிரபாகர் நடிக்கிறார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களின் கொண்டாட்ட படமாக யங் மங் சங் இருக்கும் என்கிறார் இயக்குனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x