Published : 24 Oct 2018 11:36 AM
Last Updated : 24 Oct 2018 11:36 AM
எங்கள் மனதில் தங்கிய அழகான படம் ‘பரியேறும் பெருமாள்’ என சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்குநராக அறிமுகமான படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்தது. கதிர் - ஆனந்தி பிரதான கதாபாத்திரங்களில் நடித்தனர். யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.
சாதிப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான சினிமாவாக இது கொண்டாடப்படுகிறது. சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களையும் இந்தப் படம் எழுப்பியுள்ளது.
இந்நிலையில், ‘பரியேறும் பெருமாள்’ படத்தைப் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், “எங்கள் மனதில் தங்கிய அழகான படம் ‘பரியேறும் பெருமாள்’. எல்லோருமே மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், ஆனந்தி மற்றும் ஒட்டுமொத்தப் படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி ரிலீஸான இந்தப் படம், 25 நாட்களைக் கடந்து இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அத்துடன், வருகிற வெள்ளிக்கிழமை (அக்டோபர் 26) கேரளாவிலும் வெளியாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT