Published : 20 Aug 2018 08:36 PM
Last Updated : 20 Aug 2018 08:36 PM
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு, கீர்த்தி சுரேஷ் 15 லட்ச ரூபாய்க்கு உதவி செய்துள்ளார்.
கேரளாவில் கடந்த 10 நாட்களாக வரலாறு காணாத மழை பெய்ததில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 368 பேர் உயிர் இழந்துள்ளனர். மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
‘கடவுளின் தேசம்’ என்றழைக்கப்பட்ட கேரளா, தற்போது சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. இந்தச் சேதத்தில் இருந்து மீள, பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் உதவி செய்து வருகின்றனர்.
சினிமா பிரபலங்களிடம் இருந்து நிறைய உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. கமல்ஹாசன், ரோகிணி, சூர்யா, கார்த்தி, நயன்தாரா, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம், விஜய் சேதுபதி, ஸ்ரீபிரியா, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவி, மம்மூட்டி, துல்கர் சல்மான் எனப் பலர் நிதியுதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாய் அளித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். மேலும், 5 லட்ச ரூபாய்க்கு நிவாரணப் பொருட்கள் வாங்கி அவரே நேரடியாக உதவி செய்து வருகிறார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT