Published : 04 Aug 2018 09:16 AM
Last Updated : 04 Aug 2018 09:16 AM

தாமரை’ நேரத்தில் ‘மின்னலே’

சன் தொலைக்காட்சியில் மதியம் 1.30-க்கு ஒளிபரப்பாகிவரும் ‘தாமரை’ தொடர் இன்று (சனிக்கிழமை) நிறைவுபெறுகிறது.  திங்கள்கிழமை முதல் அதே நேரத்தில் ‘மின்னலே’ என்ற புதிய தொடர், நடிகை ராதிகாவின் ராடன் மீடியா  தயாரிப்பில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த புதிய தொடரில் நாயகனாக சதீஷ், நாயகியாக ப்ரீத்தி, நிரோஷா, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தொடரின் கதைக் களம் குறித்து இயக்குநர் ஆனந்த்பாபு கூறியதாவது:

தற்போது வரும் தொடர்கள் பெரும்பாலும் குடும்பம், காமெடி, திகில் இந்த மூன்று களங்களையும் மையமாக வைத்தே எடுக்கப்படுகின்றன. காமெடி, திகில் விஷயங்களைத் தொடும்போது சற்று எதார்த்தத்தை கடந்துபோக வேண்டி இருக்கும். குடும்பப் பின்னணியில் வரும்போது வாழ்வியலை பிரதிபலிக்கும் வண்ணம் அமையும்.

இந்தத் தொடரை அப்படித்தான் எதார்த்தம் பேசும் வகையில் உருவாக்குகிறோம். நாயகன் சதீஷ், நாயகி ப்ரீத்தி இருவரும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். அவர்களது காதலால் வீட்டில் வெடிக்கும் விஷயங்களை பின்னணியாகக் கொண்டு தொடர் நகரும்.

இதில் வன்மம், தேவையில்லாத சத்தம் உள்ளிட்ட விஷயங்கள் இருக்காது. திருமணத்துக்குப் பிறகு உறவுகளிடம் எப்படி சிக்கல்கள் உருவாகின்றன, அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பதையும் இந்த தொடர் எடுத்து வைக்கும். நிரோஷா உட்பட அனைத்து கதாபாத்திரங்களின் பங்களிப்பும் எல்லோரையும் ரசிக்க வைக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x