Published : 25 Aug 2018 01:26 PM
Last Updated : 25 Aug 2018 01:26 PM

‘சண்டக்கோழி 2’ படக்குழுவினருக்கு தங்கக்காசு பரிசளித்த விஷால், லிங்குசாமி

விஷால், லிங்குசாமி இருவரும் ‘சண்டக்கோழி 2’ படக்குழுவினருக்கு தங்கக்காசு பரிசளித்துள்ளனர்.

லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சண்டக்கோழி 2’. விஷால் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஏற்கெனவே ரிலீஸான முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் அமைந்துள்ளதால், முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த மீரா ஜாஸ்மின், இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

மேலும், ராஜ்கிரண், வரலட்சுமி சரத்குமார், கஞ்சா கருப்பு, ஹரீஷ் பெராடி, அப்பாணி சரத் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, சமீபத்தில் முடிவடைந்தது. இறுதி நாளன்று, விஷால் மற்றும் லிங்குசாமி இருவரும் தனித்தனியாகப் படக்குழுவினருக்கு தங்கக்காசு பரிசளித்துள்ளனர். மொத்தம் 150 பேருக்கு தங்கக் காசுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் கீர்த்தி சுரேஷும் தன்னுடைய கடைசி நாள் படப்பிடிப்பில் படக்குழுவினர் அனைவருக்கும் தங்கக்காசு பரிசளித்தது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 18-ம் தேதி உலகம் முழுவதும் ‘சண்டக்கோழி 2’ படம் ரிலீஸாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x