Published : 20 Aug 2018 03:40 PM
Last Updated : 20 Aug 2018 03:40 PM
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு, 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
கேரளாவில் கடந்த 10 நாட்களாக வரலாறு காணாத மழை பெய்ததில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 368 பேர் உயிர் இழந்துள்ளனர். மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
‘கடவுளின் தேசம்’ என்றழைக்கப்பட்ட கேரளா, தற்போது சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. இந்தச் சேதத்தில் இருந்து மீள, பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் உதவி செய்து வருகின்றனர்.
சினிமா பிரபலங்களிடம் இருந்து நிறைய உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. கமல்ஹாசன், ரோகிணி, சூர்யா, கார்த்தி, நயன்தாரா, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம், விஜய் சேதுபதி, ஸ்ரீபிரியா, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்., சிரஞ்சீவி, மம்மூட்டி, துல்கர் சல்மான் எனப் பலர் நிதியுதவி செய்து வருகின்றனர்.
இந்த நிதியுதவி, கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT