Last Updated : 03 Jun, 2018 09:12 AM

 

Published : 03 Jun 2018 09:12 AM
Last Updated : 03 Jun 2018 09:12 AM

இளையராஜா 75: எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது

தூரங்களை விழுங்கும் நீளம் நீ

கசடதபற பூட்டை திறக்கும்

சரிகமபதநி சாவி.

எங்கள் இரவின் சமையலில்

ஒரு டீஸ்பூன் மழை.

தன் கை பைக்குள்

எடுத்து வைத்துக்கொள்கிறது

உன் பாடல்களை

என் பயணம்.

நிபந்தனைக்கு உட்படுத்துகிறது

நிபந்தனையற்ற உன் இசை.

14 ராஜா பாடல்கள் என்கிற

என் பதிலுக்கு மேலே

நடந்துகொண்டே இருக்கிறது

காலை நடை

எவ்வளவு நேரம் எனும் கேள்வி.

விருப்பங்களின் கடவுள்

இரவின் அதிகாரம் எனும்

உன்னைப் பற்றிய இரண்டு வரிகளும்

என் மணற்கடிகாரத்தின்

மேல் கீழ் பாகங்களாகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x