Published : 23 Jun 2018 02:56 PM
Last Updated : 23 Jun 2018 02:56 PM

“நான் நலமாக இருக்கிறேன்” - தனுஷ் விளக்கம்

‘நான் நலமாக இருக்கிறேன்’ என ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் தனுஷ்.

தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ படத்தில் நடித்து வருகிறார். ஏற்கெனவே ரிலீஸான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி வருகிறது. தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சாய் பல்லவியின் போர்ஷன் முடிந்துவிட, தனுஷ் - சாய் பல்லவி இணைந்து ஆடும் ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கியிருக்கிறது. தற்போது சூர்யாவுடன் ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்துவரும் சாய் பல்லவி, அது முடிந்ததும் இந்தப் பாடல் காட்சியில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், முக்கியமான காட்சி ஒன்றில் நடித்தபோது தனுஷுக்குப் பயங்கரமாக அடிபட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. அவர் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார் என்பது போன்ற தகவல்கள் பரப்பப்பட, தனுஷே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

“என்னுடைய அன்பான ரசிகர்களே... இது மிகப்பெரிய காயம் கிடையாது. நான் நலமாகவே இருக்கிறேன். உங்களுடைய பிரார்த்தனைக்கும் அன்புக்கும் நன்றி. என்னுடைய பலத்தின் தூண்களாகிய உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன்” என விளக்கம் அளித்துள்ளார் தனுஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x