Published : 10 May 2024 10:50 AM
Last Updated : 10 May 2024 10:50 AM

‘பாகுபலி’ கார்ட்டூன் கேரக்டருக்கு தோனியின் சாயல்: ராஜமவுலி விளக்கம்

ஹைதராபாத்: ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ அனிமேஷன் தொடரில் பாகுபலி கதாபாத்திரத்தின் முகம் தோனியின் சாயலில் இருப்பது குறித்து இயக்குநர் ராஜமவுலி விளக்கமளித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘பாகுபலி’. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் கதாபாத்திரங்களை வைத்து ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ என்ற பெயரில் அனிமேஷன் வெப் தொடர் உருவாகியுள்ளது.

வரும் 17ம் தேதி வெளியாக இருக்கும் இதை, கிராஃபிக்ஸ் இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி, அண்மையில் ஹைதராபாத்தில் நடந்தது. இதில் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்தின் முகம் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் சாயலில் இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ராஜமவுலி, “என்னைப் போலவே இதனை உருவாக்கியவர்களும் தோனியின் ரசிகர்களாக இருக்கலாம்” என்று சிரித்தபடியே கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x