Published : 25 Mar 2024 05:00 AM
Last Updated : 25 Mar 2024 05:00 AM

காதலும் பாசமும் நிறைந்த ‘ஆலகாலம்’

சென்னை: அறிமுக இயக்குநர் ஜெயகிருஷ்ணா, நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘ஆலகாலம்’. நாயகியாக சாந்தினி நடித்துள்ளார். இவர்களுடன் தீபா, பாபா பாஸ்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர் மனோகர் நடித்துள்ளனர். ஸ்ரீஜெய் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ் அம்மாவாக நடித்துள்ளார்.

படம்பற்றி ஜெயகிருஷ்ணா கூறும்போது, “நான் யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாமல், இந்தப் படத்தை இயக்கி இருக்கிறேன். ஆலகாலம் என்றால் கொடிய நஞ்சு. வஞ்சகம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கிற விஷம், உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதில் பலர் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில் லட்சியத்தோடு வளரும் மகன், வெற்றிக்குப் போராடும் இளைஞன், தன்னம்பிக்கையுடன் கரம் கோர்க்கும் காதலி, இவர்கள் வாழ்க்கைக்குள் வரும் வஞ்சகம், சூழ்ச்சியிலிருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா என்பது கதை. காதலும் பாசமும் நிறைந்த குடும்பப் படமாக உருவாகியுள்ளது. ஏப்ரல் 5-ல் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்” என்றார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு கா.சத்தியராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x