Published : 16 Dec 2023 08:49 PM
Last Updated : 16 Dec 2023 08:49 PM

‘சமூக வலைதளங்களில் இருந்து ப்ரேக்’ - லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு

சென்னை: தனது அடுத்தப் படத்தில் கவனம் செலுத்த இருப்பதால் சமூக ஊடகங்களிலிருந்து ப்ரேக் எடுப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளிவந்துள்ள ‘ஃபைட் கிளப்’ திரைப்படத்துக்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது அடுத்த படத்துக்கான கதையை எழுத ஆரம்பித்துள்ளதால், அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன். இந்தக் காலக்கட்டத்தில் நான் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பேன். பாசிட்டிவாக இருங்கள், நெகட்டிவிட்டியை புறந்தள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.

‘லியோ’ படத்துக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். ரஜினியின் 171-வது படமாக உருவாகும் இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x