Published : 05 Dec 2023 05:45 AM
Last Updated : 05 Dec 2023 05:45 AM

மிக்ஜாம் புயலால் தியேட்டர்களில் காட்சிகள் ரத்து

சென்னை: ‘மிக்ஜாம்' புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியது. தொடர் மழை மற்றும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் வீட்டிலேயே முடங்கினர். இந்த நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்ட திரையரங்குகளில் காட்சிகள் நேற்று ரத்து செய்யப்பட்டன. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் இதைத் தெரிவித்தார். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்றும் காட்சிகளை ரத்து செய்ய சங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். கனமழை காரணமாக, கடந்த சில நாட்களாகவே சென்னை திரையரங்குகளில் பார்வையாளர்கள் வருகை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x