Published : 17 Jan 2018 08:45 PM
Last Updated : 17 Jan 2018 08:45 PM

அரசியல் ஈடுபடும் நடிகரை ஆதரிக்கமாட்டேன் என சொல்லவில்லை: சூர்யா தரப்பு விளக்கம்

அரசியலில் ஈடுபடும் நடிகரை ஆதரிக்கமாட்டேன் என்று சூர்யா கூறியதாக வெளியாகும் செய்திக்கு அவர் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான 'தானா சேர்ந்த கூட்டம்' பொங்கல் பண்டிகை அன்று வெளியானது. இதே படம் தெலுங்கு ரசிகர்களுக்காக 'கேங்' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ஹைதராபாத்திரல் இன்று சூர்யா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில் அரசியல் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். 'அரசியலில் ஈடுபடும் எந்த நடிகரையும் ஆதரிக்கவில்லை, எதிர்காலத்திலும் யாரையும் ஆதரிக்க மாட்டேன்' என்று சூர்யா கூறியதாக செய்தி வெளியானது.

இதுகுறித்து சூர்யா தரப்பில் விசாரித்த போது, இல்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் சூர்யா தரப்பினர் கூறுகையில், ''தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து நிறைய கேள்விகளை ஹைதராபாத் செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு சூர்யா பதிலளிக்கையில், நான் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. அப்படி ஒரு தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது. அதில் எந்த உண்மையும் இல்லை. அரசியலுக்கு வரும், ஈடுபடும் நடிகர்களை நான் யாரை ஆதரிக்கிறேன் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது என்றே சூர்யா கூறினார்'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x