Last Updated : 30 Nov, 2017 04:46 PM

 

Published : 30 Nov 2017 04:46 PM
Last Updated : 30 Nov 2017 04:46 PM

சிம்பு மீது அன்பானவன் அசராதவன் அடங்காதவன் தயாரிப்பாளர் சரமாரி குற்றச்சாட்டு

சிம்பு மீது 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சரமாரி குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்.

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் பெரும் தோல்வியடைந்ததால், சிம்புவின் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்திருக்கிறார். படப்பிடிப்புக்கு சரியாக வரவில்லை, 29 நாட்கள் மட்டுமே வந்தார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அப்புகாரில் தெரிவித்திருக்கிறார். இதன் அடிப்படையில் சிம்புவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தயாரிப்பாளர் சங்கம். மேலும் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஈடுகட்டும் வரை சிம்புவுக்கு 'ரெட்' போட்டுள்ளார்கள். ('ரெட்' என்றால் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் அவரை வைத்து படம் பண்ண வேண்டாம் என செய்தியை கூறுவது)

இந்நிலையில் சிம்பு குறித்து தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

சிம்பு எனக்கு கால்ஷீட் தருவதாக கூறினார். அவருடைய வீட்டுக்கு சென்று பேசும் போது "நான் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வருவேன். என் மீது எந்த புகாரும் இல்லை. எல்லாவற்றையும் உணர்ந்து விட்டேன். ஐந்தாயிரம் ரூபாய் கூட என்னிடம் இல்லை. என்னை சுற்றி பத்து பேர் இருக்கிறார்கள். அவர்கள் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கட்டுவதற்கு கூட பணம் இல்லை. பணத்தின் அருமையையும் இப்போது உணர்ந்து விட்டேன். எனவே ஒழுங்காக நடிக்க முடிவு செய்து உள்ளேன். என்னை வைத்து படம் எடுங்கள். கண்டிப்பாக முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்" என்று பேசினார்.

ஜனவரியில் படப்பிடிப்புக்கு திட்டமிட்டு இருந்தோம். அவர் தேதி கொடுத்துவிட்டு இரண்டு முறை நாயகி மும்பையிலிருந்து இங்கு வந்து தங்கியிருந்த போது கூட அவர் படப்பிடிப்புக்கு வரவவில்லை. இதைப்பற்றி அவரிடம் விளக்கம் கேட்க வீட்டுக்கு சென்ற போது நாலு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை காக்க வைத்தார். அவர் முதலில் சொன்னது போல் நடந்து கொண்டதே இல்லை. முறையாக படப்பிடிப்புக்கு வரவில்லை. சரியான முறையில் தேதிகள் வழங்கவில்லை.

படத்தின் கதைப்படி படத்தையும் எடுக்க விடவில்லை. இப்படி தலையிட்டு மொத்தமாக படத்தையே கெடுத்து விட்டார் சிம்பு. இப்போ நான் தான் மொத்தமா பணத்தை இழந்து, விநியோகஸ்தர்கள், கடன்காரர்கள் என அனைவருக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். சிம்புக்கு வேண்டியது பணம். அதுக்காக எந்தவித பொய் வேண்டுமானாலும் சொல்லுவார். அவர் இனி திருந்தி சரியாக படம் பண்ணுவார் என்றெல்லாம் தெரியவில்லை. இதுவரையிலும் அவரை யாரும் நடிக்க கூப்பிட்டதாக தெரியவில்லை.

சிம்புவின் அப்பா - அம்மா முன்னால் தான் இரண்டு கோடி கொடுத்தேன். பல தயாரிப்பாளர்களும் சிம்புவை வைத்து படம் எடுக்கிறீர்களா?. அவர் சரியாக படப்படிப்புக்கு வரவே மாட்டார் என்று சொன்னார்கள். என்னை குழப்பி படம் எடுக்க வைத்து விட்டார். உதாரணமாக 10-ம் தேதி படப்பிடிப்பு நடத்த திட்டம் போட்டு இருந்தால், எனக்கு ஏதோ ஒரு மாதிரி இருக்கு அடுத்த வாரத்தில் நடித்து கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லுவார்.

2 - 10 மணி கால்ஷீட் என்றால் 10 மணிக்கு சிம்பு வருவார். அவர் வந்து 5 நிமிடம் கூட நடிக்க முடியாதுன்னு போவார். இப்படி எனக்கு பல விதத்தில் கஷ்டங்களை கொடுத்து உள்ளார். அவர் எப்போதுமே சொன்னது போல் நடந்ததே இல்லை அதான் எனக்கு பிரச்சினையே.

இவ்வாறு மைக்கேல் ராயப்பன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x