Published : 23 Aug 2023 12:38 PM
Last Updated : 23 Aug 2023 12:38 PM

எஸ்.பி.சரண் குரலில் ‘சந்திரமுகி 2’ இரண்டாவது சிங்கிள் வெளியீடு

சென்னை: ‘சந்திரமுகி 2’ படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது சிங்கிளான ‘மோருணியே’ பாடல் வெளியானது. எம்.எம்.கீரவாணி இசையமைப்பில், எஸ்.பி.சரண் இப்பாடலைப் பாடியுள்ளார்.

பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், 'சந்திரமுகி'. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் உருவாகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தாக படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தற்போது படத்தின் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் முதல் சிங்கிளான ’ஸ்வாகாதாஞ்சலி’ பாடல் சமீபத்தில் வெளியானது. இதனையடுத்து இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘மோருணியே’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. எம்.எம்.கீரவாணி இசையமைப்பில் இப்பாடலை எஸ்.பி.சரண் பாடியுள்ளார். ‘சந்திரமுகி’ முதல் பாகத்தில் ரஜினியின் அறிமுகப்பாடலான ‘தேவுடா தேவுடா’ பாணியில் இப்பாடல் உருவாகியுள்ளது. ‘மோருணியே’ பாடலின் லிரிக்கல் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x