Last Updated : 11 Dec, 2017 12:47 PM

 

Published : 11 Dec 2017 12:47 PM
Last Updated : 11 Dec 2017 12:47 PM

பாதியில் முடிந்த தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு: விஷாலை கிண்டல் செய்த ராதிகா

தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு பாதியில் முடிந்ததற்கு, அதன் தலைவர் விஷாலை கிண்டல் செய்திருக்கிறார் ராதிகா சரத்குமார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் 10-வது பொதுக்குழு கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டதால் பாதியிலேயே முடிக்கப்பட்டது. ஆர்.கே.நகரில் விஷால் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்ததே இந்த சலசலப்புக்கு காரணம் என்று பலர் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த சலசலப்பு குறித்து நடிகர் மோகன் ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனை தெரிவித்திருந்தார். அதனைக் குறிப்பிட்டு ராதிகா சரத்குமார் "கெடுவான் கேடு நினைப்பான்" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், "பிரச்சினை என்றால் அவர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டுமே தவிர ஊடகங்களுக்கு போகக் கூடாது என்று தலைவர் கூறுவது காமெடியாக உள்ளது. எங்கேயோ கேட்ட குரல். ஜெகில் அன்ட் ஹைட் போன்று அவருக்கு மரியாதையோ நெறிமுறையோ ஒன்றும் தெரியாது" என்றும் தெரிவித்திருக்கிறார் ராதிகா சரத்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x