Last Updated : 23 Nov, 2017 09:49 AM

 

Published : 23 Nov 2017 09:49 AM
Last Updated : 23 Nov 2017 09:49 AM

அன்புசெழியன் போன்ற உத்தமர்கள் தவறாக சித்தரிக்கப்படுவது வேதனை: இயக்குநர் சீனுராமசாமி

அன்புசெழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாகச் சித்தரிக்கப்படுவது வேதனை என்று இயக்குநர் சீனுராமசாமி தெரிவித்திருக்கிறார்.

கடன் கொடுத்த பிரபல பைனான்சியர் ஒருவர் மிரட்டியதன் காரணமாக தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாக அசோக்குமார் கடிதம் எழுதி வைத்திருந்தார். அசோக்குமாரின் தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், அன்புசெழியனுக்கு ஆதரவாக இயக்குநர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

எம்.ஜி.ஆர், சிவாஜி, போல் இல்லை இன்றைய நடிகர்கள். அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாகச் சித்தரிக்கப்பவது வேதனை. நான் நியாயத்தின் பக்கமே.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x