Last Updated : 16 Oct, 2017 06:13 PM

 

Published : 16 Oct 2017 06:13 PM
Last Updated : 16 Oct 2017 06:13 PM

எனக்கான தனி இடத்தை அடைய கடுமையாக உழைப்பேன்: சிம்பு

எனக்கான தனி ஒரு இடத்தை அடைய மிகவும் கடுமையாக உழைப்பேன் என்று சிம்பு தெரிவித்திருக்கிறார்.

நடிப்பு, இயக்கம் உள்ளிட்டவற்றைத் தாண்டி 'சக்க போடு போடு ராஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார் சிம்பு. இதனிடையே அவ்வப்போது பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.

'மோனிஷா என் மோனலிசா' படத்தில் முதல் பாடலைப் பாடிய சிம்பு, விரைவில் வெளியாகவுள்ள 'என் ஆளோட செருப்ப காணோம்' படத்தில் பாடியதின் மூலம் 100 பாடல்களைப் பாடியுள்ள பெருமையைப் பெற்றிருக்கிறார்.

100 பாடல்களைப் பாடியிருப்பது குறித்து சிம்பு கூறியிருப்பதாவது:

பாடல்கள் பாடுவது எப்போதுமே எனது ஆர்வம், என் தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது. பெரும்பாலான சூப்பர் ஹிட் பாடல்கள் நான் பாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. 100 பாடல்களை பாடியிருக்கிறேன் என்பதை உணரவே இல்லை.

இந்தப் பயணத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், உடன் பாடிய பாடகர்கள் ஆகியோருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் எப்போதுமே கற்றுக் கொள்ளும் ஆர்வம் உடையவன், எல்லா இசையமைப்பாளர்களுடனும் வேலை செய்திருப்பது இசையில் பரந்த மற்றும் பெரிய புரிதலைக் கொடுத்திருக்கிறது.

எந்த அவதாரத்தில் நான் இருந்தாலும் என்னை ஏற்றுக் கொண்டு ஊக்கப்படுத்தும் என் ரசிகர்களுக்கு நன்றி. என்னைப் பொறுத்தவரையில் 100 என்பது சாதாரண ஒரு நம்பர் தான், ஆனாலும் இந்த நேரத்தில் பெருமையாக உணர்கிறேன். சினிமா என்பது என் வாழ்க்கை மற்றும் உயிரோடு கலந்த ஒன்று. எனக்கான தனி ஒரு இடத்தை அடைய மிகவும் கடுமையாக உழைப்பேன்

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x