தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர் பணி: ஜன.5-ம் தேதி நேர்முக தேர்வு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர் பணி: ஜன.5-ம் தேதி நேர்முக தேர்வு
Updated on
1 min read

சென்னை: தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தில் பல்​வேறு பாடப் பிரிவு​களில் தற்​காலிக அடிப்​படை​யில் உதவிப் பேராசிரியர்​கள் நியமிக்​கப்பட உள்​ளனர். இதற்​கான நேர்​முகத் தேர்வு ஜனவரி 5-ம் தேதி நடை​பெறுகிறது.

இது தொடர்​பாக தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகப் பதி​வாளர் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பு: தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தில் ஆங்​கிலம், கணிதம், வேதி​யியல், புவி​யியல், வரலாறு, உளவியல், அரசி​யல் அறி​வியல், சிறப்பு கல்​வி​யியல் ஆகிய பாடப்​பிரிவு​களில் உதவிப் பேராசிரியர்​கள் ஒப்​பந்த முறை​யில் நியமிக்​கப்பட உள்​ளனர்.

இதற்கு உரிய கல்​வித்​தகு​தி​யும், பணி அனுபவ​மும் வாய்ந்த உதவிப் பேராசிரியர்​கள் விண்​ணப்​பிக்​கலாம். விண்​ணப்​பம் மற்​றும் இதர விவரங்​களை பல்​கலைக்​கழகத்​தின் இணை​யதளத்​தில் (www.tnou.ac.in) அறிந்​து​கொள்​ளலாம்.

சம்​பளம் தொகுப்​பூ​தி​ய​மாக மாதம் ரூ.25 ஆயிரம் வழங்​கப்​படும். இதற்​கான நேர்​முகத் தேர்வு சைதாப்​பேட்​டை​யில் உள்ள திறந்​தநிலை பல்​கலைக்​ கழகத்​தில் ஜனவரி 5-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடை​பெறும்.

விண்​ணப்​ப​தா​ரர்​கள் அனைத்து அசல் சான்​றிதழ்​களு​டன் நேர்​முகத் தேர்​வில் கலந்​து​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர் பணி: ஜன.5-ம் தேதி நேர்முக தேர்வு
டிச.24-ல் எம்ஜிஆரின் 38-வது நினைவு தினம்: மெரினா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in