Published : 18 Jan 2023 04:25 AM
Last Updated : 18 Jan 2023 04:25 AM

பெரம்பலூரில் ஜன.20-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூர்: பெரம்பலூர் ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜன.20-ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பிரபல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்துக்கு தகுதியான நபர்களை திறமை மற்றும் கல்வித்தகுதி அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளனர். எனவே, இம்முகாமுக்கு 10-ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த ஆண், பெண் ஆகியோர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.

வேலை தேடுவோர் தவறாது தங்களது கல்வித்தகுதி மற்றும் சுய விவரங்களை https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஜன.20-ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x