Published : 09 Feb 2024 04:04 AM
Last Updated : 09 Feb 2024 04:04 AM

சேலத்தில் பிப்.16-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ஆட்சியர் பிருந்தா தேவி | கோப்புப் படம்

சேலம்: சேலத்தில் வரும் 16-ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது, என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 16-ம் தேதி சேலம் கோரி மேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளன.

இம்முகாமில் அனைத்து விதமான கல்வித் தகுதி உள்ளவர்களும் கலந்துகொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை நாடுநர்களும் tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ, 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம், என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x