Published : 05 Jul 2023 04:07 AM
Last Updated : 05 Jul 2023 04:07 AM

சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பெண் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி: தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.கலையரசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதுக்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

மேலும், டேட்டா புளோ மற்றும் எச்ஆர்டி சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். பணியாளர்களுக்கு உணவுப் படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக் காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலை தளமான www.omcmanpower.com-60-ல் தெரிந்து கொள்ளலாம்.

ஊதியம் மற்றும் பணி பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள் 044-22505886, 044-22502267, செல்போன் எண்கள் 9566239685, 6379179200-ல் தொடர்பு கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு இடைத்தரகரோ அல்லது ஏஜென்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இந்தப்பணிக்கு தேர்வுபெறும் பணியாளர்களிடம் இருந்து ரூ.35,400 மட்டும் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x