ஈரான் போர்: மூலப்பொருள் தட்டுப்பாட்டால் குடிநீர் பாட்டில் விலை கடும் உயர்வு

ஈரான் போர்: மூலப்பொருள் தட்டுப்பாட்டால் குடிநீர் பாட்டில் விலை கடும் உயர்வு
Updated on
2 min read

திருச்சி: அமெரிக்​கா- ஈரான் போர் காரண​மாக பிளாஸ்டிக் மூலப்​பொருட்​கள் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இதனால், பிளாஸ்​டிக் பாட்​டில்​கள் விலை அதிகரித்​துள்​ளது.

குறிப்​பாக 1 லி. குடிநீர் பாட்​டில் விலை லிட்​டருக்கு ரூ.5 உயர்ந்​துள்​ளது. இந்தப் போரால் பிளாஸ்​டிக் பொருட்​கள் தயாரிக்​க தேவைப்​படும் மூலப்​பொருட்​களுக்​கும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ள​தால், அவற்​றின் விலை​யும் கணிச​மாக உயர்ந்​துள்​ளது.

பொது​வாக, பிளாஸ்​டிக் பொருட்​கள் தயாரிக்க கச்சா எண்​ணெய்​யில் இருந்து தயாரிக்​கப்​படும் பெட்ரோ ரசாயன பொருட்​கள் பயன்​படுத்​தப்​படும். தற்​போது அமெரிக்​கா- ஈரான் போரால் அதற்​கும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ள​தால் பிளாஸ்​டிக் பொருட்​கள் உற்​பத்தி பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

இதன்படி பாலி எத்​திலீன், பிவிசி, பாலிபுரோப்​பிலீன், பாலிஸ்​டிரீன் போன்​றவற்​றின் விலை சுமார் 40 சதவீதம் உயர்ந்​துள்​ளது. இதையடுத்​து, மினரல் வாட்​டர் பாட்​டில், வீட்டு உபயோக பிளாஸ்​டிக் பொருட்​கள், மருத்​துவ பிளாஸ்​டிக் பொருட்​கள் போன்​றவற்​றின் விலை அதி​கரித்​துள்​ளது.

குறிப்பாக பிளாஸ்டிக் பாட்டில் தயாரிக்க பயன்படும் கண்ணாடி போன்ற மினுமினுப்பு தன்மை கொண்ட பாலி எத்திலீன் டெரெப்தலேட் விலை ஒரு கிலோ ரூ.123-ல் இருந்து ரூ.210 ஆக உயர்ந்துவிட்டது.பேக்​கிங் பிளாஸ்​டிக் பேப்​பர் விலை கிலோ ரூ.140-ல் இருந்து ரூ.240 ஆக உயர்ந்​து​விட்​டது.

இதனால், நேற்று முன்​தினம் வரை ரூ.8-க்கு விற்​பனை செய்​யப்​பட்​ட 200 மில்லி லிட்​டர் குடிநீர் பாட்​டில் விலை இன்று ரூ.10-க்​கும், ரூ.10-க்கு விற்​கப்பட்ட 300 மிலி குடிநீர் பாட்​டில் ரூ.12-க்​கும், ரூ.12-க்கு விற்​பனையான 500 மிலி குடிநீர் பாட்​டில் ரூ.16-க்​கும் ரூ.20-க்கு விற்​பனை செய்யப்​பட்​ட ஒரு லிட்​டர் பாட்​டில் ரூ.25-க்​கும், ரூ.30-க்கு விற்ற 2 லிட்​டர் பாட்​டில் ரூ.35-க்​கும், ரூ.50-க்கு விற்​பனையான 5 லிட்​டர் குடிநீர்பாட்​டில் ரூ.70-க்​கும், மறு​முறை பயன்​படுத்​தப்​படும் கேன்​களில் அடைக்​கப்​பட்ட 20 லிட்​டர் குடிநீர் ரூ.45-ல் இருந்து ரூ.55-க்​கும் விற்​பனை செய்​யப்​படு​கிறது.

கோடை காலம் தொடங்க உள்ள நிலை​யில் போர் தொடரும்​பட்​சத்​தில் இந்த விலை​யேற்​ற​மும் தொடரும் என்று தமிழ்​நாடு அடைக்​கப்​பட்ட குடிநீர் உற்​பத்​தி​யாளர் சங்​கத்​தினர் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து அச்சங்​கத் தலை​வர் கண்​ணன் கூறும்​போது, “ஒரு​முறை குடிநீர் பாட்டிலில் விலையை உயர்த்​தி​னால் அடுத்த 4 ஆண்​டு​களுக்கு அந்த விலை​யேற்​றம் நிலை​யான​தாக இருக்​கும். ஆனால் தற்​போதைய நிலை​யில், மூலப்​பொருள்​களின் தொடர் விலை​யேற்​றத்​தால் 4 நாட்​களுக்கு ஒரு முறை குடிநீர் பாட்​டில்​களின் விலையை உயர்த்​த வேண்​டி​யுள்​ளது.

குடிநீரை அடைத்து விற்​பனை செய்​யும் தொழிலை பாது​காக்க பிளாஸ்​டிக் பாட்​டில்​களை மத்​திய, மாநில அரசுகள் கொள்​முதல் செய்ய வேண்​டும். நியாய​மான நிலை​யான விலை​யில் பாட்​டில் குடிநீர் பொது​மக்​களுக்கு தடை​யின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

அதற்​கும் மேலாக பிளாஸ்​டிக் பாட்​டில்​கள், மூடிகள் தயாரிப்​ப​தற்கு உரிய மூலப்​பொருட்​களை தங்கு தடை​யின்றி கிடைக்க வழி​வகை செய்ய வேண்​டும்’’ என்​றார்.

ஈரான் போர்: மூலப்பொருள் தட்டுப்பாட்டால் குடிநீர் பாட்டில் விலை கடும் உயர்வு
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 2,602 புதிய செல்போன்கள் இருப்பு வைப்பு: அதிமுக புகார் குறித்து தலைமைச் செயலாளர் விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in