இந்திய வேளாண் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஐ.நா. முதலீடு

இந்திய வேளாண் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஐ.நா. முதலீடு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​திய வேளாண் துறை சார்ந்த ஸ்டார்ட்- அப் நிறுவனங்​களில் முதலீடு செய்ய ஐ.நா.​வின் ஐஎப்​ஏடி அமைப்பு விருப்பம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக அடுத்த ஆண்​டில் 5 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகும் என்று அறி​விக்கப்பட்டுள்​ளது.

ஐ.நா. சபை சார்​பில் கடந்த 1977-ம் ஆண்​டில் வேளாண் வளர்ச்சிக்கான சர்​வ​தேச நிதி​யம் (ஐஎப்​ஏடி) தொடங்​கப்​பட்​டது. இந்த அமைப்பு உலகம் முழு​வதும் 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களில் 200-க்​கும் மேற்​பட்ட வேளாண் திட்​டங்​களை செயல்​படுத்தி வருகிறது.

இத்​தாலி தலைநகர் ரோமை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் ஐஎப்​டிஏ அமைப்பு பின்​தங்​கிய நாடு​கள், வளரும் நாடு​களில் வறுமையை ஒழிக்க அதிதீ​விர நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. இந்த சூழலில் ஐஎப்​டிஏ முதல்​முறை​யாக இந்திய தனி​யார் வேளாண் துறை​யில் கால் பதிக்க திட்​ட​மிட்டு உள்ளது.

இதற்​காக 2026- 2033 வரைவு திட்​டத்தை அந்த அமைப்பு வரையறுத்து உள்​ளது. இது குறித்து அமைப்​பின் துணைத் தலைவர் டோனால் பிர​வுண், பிடிஐ செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஐஎப்​டிஏ கொள்கை விதிகளில் பல்வேறு சீர்​திருத்​தங்​கள் செய்​யப்​பட்டு உள்​ளன.

இதன்​படி அரசு நிறு​வனங்​கள் மட்​டுமன்றி தனி​யார் நிறுவனங்களு​ட​னும் இணைந்து செயல்பட முடிவு செய்​யப்​பட்டு இருக்​கிறது. முதல்​ கட்​ட​மாக இந்​தி​யா​வின் வேளாண் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறு​வனங்​களு​டன் கைகோக்க உள்​ளோம். அடுத்த ஆண்​டில் இந்​திய ஸ்டார்ட் அப் நிறு​வனங்​களு​டன் 4 முதல் 5 ஒப்​பந்​தங்​களில் கையெழுத்​திடு​வோம்.

இந்​திய அரசு மற்​றும் இந்​தி​யா​வின் பல்​வேறு மாநில அரசுடன் இணைந்து 110 லட்​சிய மாவட்​டங்​கள் திட்​டத்​தில் பங்​கேற்க உள்ளோம். எங்​களது திட்​டங்​களுக்கு நபார்டு அமைப்​பும் நிதி உதவி​களை வழங்க முன்​வந்​திருக்​கிறது.

இந்​தி​யா​வின் சிறு விவ​சா​யிகளு​டன் இணைந்து செயல்பட திட்​ட​மிட்டு உள்​ளோம். சிறு விவ​சா​யிகளுக்​காக கிராமங்​களில் தானிய சேமிப்பு கிடங்​கு​கள், உணவு பதப்​படுத்​துதல் கூடங்​களை அமைப்போம். விவ​சா​யிகளின் சந்​தை​வாய்ப்​பு​களை உறுதி செய்வோம்.

உலகம் முழு​வதும் பரு​வநிலை மாறு​பாடு மிகப்​பெரிய பிரச்சினையாக உரு​வெடுத்து வரு​கிறது. இந்த சூழலில் பரு​வநிலை மாற்​றங்​களை தாங்கி வளரும் பயிர்​கள் சார்ந்த ஆராய்ச்சி​யில் ஈடு​படு​வோம். கோது​மை, நெல் சாகுபடிக்கு அதிக தண்​ணீர் தேவைப்​படு​கிறது. இதற்கு மாற்​றாக சிறு​தானிய சாகுபடிக்கு ஊக்​கம் அளிப்​போம்.

ஒரு சிறு விவ​சாயி 10 கிலோ அரிசி வைத்​திருந்​தால், அந்த அரிசியை நல்ல விலைக்கு விற்​பனை செய்​வது மிக​வும் கடினம். எனவே சிறு விவ​சா​யிகளை ஒன்​றிணைத்து கூட்​டுறவு சங்கங்களை அமைப்​போம். இதன்​மூலம் பல்​வேறு விவ​சா​யிகள் கூட்​டுறவு சங்​கத்​தில் அரிசியை வழங்​கு​வார்​கள். கூட்​டுறவு சங்கம் மூலம் நல்ல விலைக்கு அரிசியை விற்க முடி​யும். இவ்​வாறு ஐஎப்​ஏடி துணைத்​ தலை​வர்​ டோனால்​ பிர​வுண்​ தெரி​வித்​துள்​ளார்​.

இந்திய வேளாண் துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஐ.நா. முதலீடு
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in