இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் அமல்: பொருளாதார உறவுகள் வலுப்படும் என பிரதமர் மோடி கருத்து

இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் அமல்: பொருளாதார உறவுகள் வலுப்படும் என பிரதமர் மோடி கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தியா - பிரிட்​டன் இடையி​லான வர்த்தக ஒப்​பந்​தம் நேற்று முதல் அதி​காரப்​பூர்​வ​மாக அமலுக்கு வந்​துள்​ள​தால், இரு நாட்டு பொருளா​தார உறவு​கள் மேலும் வலு​வடை​யும் என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

இந்​தியா மற்​றும் பிரிட்​டன் இடையே​யான ‘விரி​வான பொருளாதார மற்​றும் வர்த்தக ஒப்​பந்​தம்’ (சிஇடிஏ) மற்​றும் சமூகப் பாது​காப்பு ஒப்​பந்​தம் ஆகியவை நேற்று முதல் முறைப்​படி செயல்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளன. இந்த ஒப்​பந்​தத்​தின் கீழ், இந்​தி​யா​வின் பல்​வேறு உள்​நாட்​டுத் தயாரிப்​பு​கள் பிரிட்​டிஷ் சந்​தை​யில் எவ்​வித இறக்​குமதி வரி​யும் (பூஜ்ஜிய வரி) இன்றி நுழைவதற்கு வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

வர்த்தக ஒப்​பந்​தம் அமலுக்கு வந்​துள்​ளதை ஒரு “முக்​கிய வரலாற்றுத் தருணம்” என்று குறிப்​பிட்​டுள்ள பிரதமர் மோடி, தனது சமூக ஊடகப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: இது இந்​தியா - பிரிட்டன் இடையே​யான கூட்​டுற​வில் ஒரு மிக முக்​கிய​மான வரலாற்​றுத் தருணம். விரி​வான பொருளா​தார மற்​றும் வர்த்தக ஒப்​பந்​தம் மற்​றும் சமூகப் பாது​காப்பு ஒப்​பந்​தம் ஆகியவை அதி​காரப்​பூர்​வ​மாக நடை​முறைக்கு வந்​துள்​ளதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையே​யான பொருளா​தார உறவு​கள் இனி மேலும் ஆழமடையப் போகின்​றன. இந்த இரு ஒப்​பந்​தங்​களும் இணைந்து, நமது கூட்டு லட்​சி​யங்​களை அடைய உதவும்.

இந்த ஒப்​பந்​தம் நமது விவ​சா​யிகள், தொழில்​முனை​வோர் மற்​றும் சிறு, குறு, நடுத்தர நிறு​வனங்​களுக்கு (எம்​எஸ்​எம்​இ-கள்) பெரும் பயனளிக்​கும். அத்​துடன், தொழில்​நுட்​பம், தொழில்​முறை சேவைகள் மற்​றும் புத்​தாக்​கத் துறை​களி​லும் புதிய கதவு​களைத் திறக்​கும். இந்​தத் தருணம் நமது இரு ஜனநாயக நாடு​களுக்கு இடையே உள்ள பரஸ்பர நம்​பிக்​கை​யை​யும், வர்த்​தகம், தொழில்​நுட்​பம், முதலீடு மற்​றும் புத்​தாக்​கம் ஆகிய​வற்​றின் அடிப்படையில் ஒரு முன்​னோக்​கிய கூட்​டாண்​மை​யைக் கட்டியெழுப்​புவதற்​கான நமது உறு​தி​யை​யும் பிர​திபலிக்​கிறது. கூட்டு வளர்ச்​சிக்​காக இந்​தி​யா​வும் பிரிட்​ட​னும் தொடர்ந்து இணைந்து செயல்​படும். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

இது தொடர்​பாக மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் தனது சமூக ஊடகப் பக்​கத்​தில் வெளியிட்​டுள்ள அறி​விப்​பில், “இந்த ஒப்​பந்​தத்​தின் மூலம், இந்தியா​வின் ஒட்​டுமொத்த ஏற்​றும​திப் பொருட்​களில் சுமார் 99 சதவீதப் பொருட்​களுக்கு இறக்​குமதி வரி இல்​லாத (பூஜ்ஜிய வரி) சந்தை வாய்ப்பு கிடைத்​துள்​ளது.

மேலும், இரு நாடு​களுக்கு இடையே​யான ஒட்​டுமொத்த வர்த்தக மதிப்​பில் கிட்​டத்​தட்ட 100 சதவீத அளவை இந்த ஒப்​பந்​தம் உள்ளடக்​கி​யுள்​ளது. இந்த இரு ஒப்​பந்​தங்​கள் நேற்று முதல் அமலுக்கு வந்​துள்​ளதன் மூலம், இரு நாடு​களுக்கு இடையே​யான பொருளா​தார உறவு​கள் மேலும் வலு​வடையப் போகின்​றன” என்று குறிப்​பிட்​டுள்​ளார்​.

இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம் அமல்: பொருளாதார உறவுகள் வலுப்படும் என பிரதமர் மோடி கருத்து
காவிரி நீரை திறந்துவிடக் கோரி ஓசூரில் இருந்து நடைபயணம் சென்ற விவசாயிகள் 100 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in